ஒரே குற்ற எண்ணில் இரு வழக்குகளை பதிந்தது எப்படி? - திருப்பூர் பெண் ஆய்வாளர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

2 days ago 2

சென்னை: ஒரே குற்ற எண்ணில் இரு வழக்குகளைப் பதிவு செய்தது எப்படி என கேள்வி எழுப்பிய சென்ன உயர் நீதிமன்றம், இது குறித்து திருப்பூர் லஞ்ச ஒழிப்புத் துறை பெண் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார் தனது தாயாருக்கு சொந்தமான நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து கொடுக்க ஆட்சேபனையில்லா சான்று பெற விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பத்தின் மீது அறிக்கையளித்து வட்டாட்சியருக்கு பரிந்துரைக்க வருவாய் ஆய்வாளரான நாகராஜன் ரூ.8 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக அசோக்குமார் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வருவாய் ஆய்வாளர் நாகராஜனை கைது செய்தனர்.

Read Entire Article