ஐயப்பன் குறித்து அவதூறு பாடகி இசைவாணி, பா.ரஞ்சித் மீது போலீசில் புகார்

3 months ago 8

மேட்டுப்பாளையம்: அனைத்து ஐயப்ப பக்தர்கள் சங்கத்தின் தலைவர் செல்வராஜ் தலைமையில், நேற்று கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சுவாமி ஐயப்பனை பற்றியும், ஐயப்பனை வழிபடும் பக்தர்களின் விரதம் குறித்தும், ஐயப்பனின் மகிமை குறித்தும் அவதூறாக பாடல் பாடிய கானா பாடகி இசைவாணி மற்றும் நீலம் கல்ச்சுரல் சென்டர் நிர்வாகியும், இயக்குநருமான பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பலரும் போற்றி வணங்கும் சுவாமியை கொச்சைப்படுத்தி வருவோர் மீது சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

The post ஐயப்பன் குறித்து அவதூறு பாடகி இசைவாணி, பா.ரஞ்சித் மீது போலீசில் புகார் appeared first on Dinakaran.

Read Entire Article