‘எது வெட்கப்பட வேண்டிய ஒன்று?’ - முதல்வர் ஸ்டாலினின் ‘அன்னபூர்ணா’ கருத்துக்கு வானதி சீனிவாசன் பதிலடி

5 days ago 7

சென்னை: கோவையில் தொழில்கள் நசிந்து வருவதை வேடிக்கைப் பார்க்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதற்காக வெட்கப்பட வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்த கருத்தை முன்வைத்து வானதி சீனிவாசன் பதிலடி தந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "ஜி.எஸ்.டி. குறித்த தொழில்முனைவோரின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தவரை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று" என்று கூறியிருக்கிறார். கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் தொழில்கள் நசிந்து வருவதை அறிந்து, அதை காப்பற்றவே நிர்மலா சீதாராமன் கோவை வந்தார். ஆனால், அவரது முயற்சிகளுக்கு திமுக அரசு எந்த விதத்திலும் உதவி செய்யவில்லை. அதற்கு நேர்மாறாக பிரச்னையை திசை திருப்பி, மத்திய நிதியமைச்சர் செய்த நல்ல செயல்களை மக்களிடம் இருந்து மறைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முயல்கிறார்.

Read Entire Article