எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

11 hours ago 1
திருச்செந்தூர் அருகே சோணகன்விளை பகுதியில் முன்பக்க டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த ஆட்டோ மீது மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். முத்தாரம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுதாகர் என்பவர் வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்து எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது. ஆட்டோவில் பயணித்த ஜெயகுருத்து என்ற பெண் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்த நிலையில் அவரது மகன் மணிகண்டன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் பாக்கியராஜ் பலத்த காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read Entire Article