ஊத்தங்கரையில் புதிய சிறை அமைக்க வேண்டிய தேவை கிடையாது : அமைச்சர் ரகுபதி பதில்

2 months ago 10

சென்னை : ஊத்தங்கரையில் புதிய சிறை அமைக்க வேண்டிய தேவை கிடையாது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதிய சிறை கேட்ட உறுப்பினர் ஊத்தங்கரை தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சர் ரகுபதி அளித்த பதிலில், “ஊத்தங்கரையில் கிளைச் சிறை ஏற்கனவே இயங்கி வருகிறது, பராமரிப்பு பணிக்காக தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது, விரைவில் பராமரிப்புப் பணி முடிந்து கிளைச்சிறை மீண்டும் திறக்கப்படும். எனவே புதிய சிறை அமைக்க வேண்டிய தேவை கிடையாது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post ஊத்தங்கரையில் புதிய சிறை அமைக்க வேண்டிய தேவை கிடையாது : அமைச்சர் ரகுபதி பதில் appeared first on Dinakaran.

Read Entire Article