உதயநிதிக்கு எதிராக ரூ. 1 கோடி மான நஷ்டஈடு கோரி வழக்கு: பொள்ளாச்சி ஜெயராமன் ஆஜராகி சாட்சியம்

1 week ago 7

சென்னை: அமைச்சர் உதயநிதிக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்த முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவரான பொள்ளாச்சி ஜெயராமன், உயர் நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணி செயலாளரான தற்போதைய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவரான பொள்ளாச்சி ஜெயராமனை தொடர்புபடுத்தி பேசியிருந்தார். அதையடுத்து தனக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக உதயநிதிக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரி பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

Read Entire Article