உச்ச நீதிமன்ற தடை | அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொ.கு. வழக்கு மறு விசாரணை அக்.18-க்கு ஒத்திவைப்பு

1 week ago 8

அஸ்ரீவில்லிபுத்தூர்: அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மறு விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து, இந்த வழக்கின் மறு விசாரணையை அக்டோபர் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006 -2011 திமுக ஆட்சி காலத்தில் தங்கம் தென்னரசு பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவரும் அவரது மனைவி மணிமேகலையும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சம் சொத்து சேர்த்ததாக கடந்த 2012-ம் ஆண்டு விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் 8 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

Read Entire Article