இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகி: ஐகோர்ட் கிளை நிபந்தனை முன்ஜாமீன்

2 hours ago 4

மதுரை: இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகிக்கு முன்ஜாமீன் வழங்கிய மதுரை உயர் நீதிமன்றக் கிளை, சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் அவருக்கு நிபந்தனை விதித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி கதிரவன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவில், ‘ராமநாதபுரம் மாவட்டம் அதியமான் பீச் பேருந்து நிலையம் அருகே கடந்த மாதம் இஸ்லாமிய சொற்பொழிவு நடைபெற்றது. இதுதொடர்பாக முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு பதிவிட்டதாக கூறி என் மீது மண்டபம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் போலீஸார் என்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார்

Read Entire Article