இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் மதிப்பிலான 700 கிலோ கடல் அட்டை பறிமுதல்

3 hours ago 2
இலங்கைக்கு கடத்திச் செல்லப்படவிருந்த 30 லட்ச ரூபாய் மதிப்பிலான 700 கிலோ கடல் அட்டைகளை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அவர்கள் ரோந்து சென்றபோது, நாட்டுப்படகில் பயணித்த சிலர், கடலில் குதித்து தப்பிச் சென்றனர். நாட்டுப்படகை சோதனை செய்ததில் 48 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இருந்தன. அவற்றை மண்டபம் வனத்துறை அலுவலகத்தில் கடலோர காவல்படையினர் ஒப்படைத்தனர்.
Read Entire Article