இரவு 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

9 hours ago 3

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (19.09.2024) முதல் 25.09.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் இரவு 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவாரூர், நாகை மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்த மதுரை நகரில் பரவலாக மழைபெய்து வருகிறது. இதன்படி மதுரை சந்தைப்பேட்டை, கே.கே.நகர், தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மழைபெய்து வருகிறது.

Read Entire Article