பரமக்குடி: பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு 6 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர் என தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா கூறியுள்ளார்.
ராமநாபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 67வது நினைவு நாள் நாளை (செப்.11) அனுசரிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து பரமக்குடி சந்தைபேட்டை பின்புறம் அமைந்துள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக் கணக்கான மக்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்நிலையில் பரமக்குடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.