இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பரமக்குடியில் உதயநிதி உள்ளிட்ட தலைவர்கள் நாளை மரியாதை

1 week ago 10

ராமநாதபுரம்: இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய தலைவர்கள் நாளை (செப்.11) பரமக்குடியில் மரியாதை செலுத்த உள்ளனர். இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 67-வது நினைவு நாள் நாளை (செப்.11) அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து பரமக்குடி சந்தைபேட்டை பின்புறம் அமைந்துள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் மரியாதை செலுத்துகின்றனர்.

Read Entire Article