இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி மலர் வளையம் வைத்து மரியாதை

1 week ago 14

பரமக்குடி: பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர் உதயநதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் 67-வது நினைவு தினம் இன்று (செப்.11)அனுசரிக்கப்பட்டது. இதில் திமுக சார்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், மூர்த்தி, கயல்விழி செல்வராஜ், டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன், முன்னாள் அமைச்சர் சுந்தரராஜ், நவாஸ்கனி எம்பி, முன்னாள் எம்பி பவானிராஜேந்திரன், எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், செ.முருகேசன், தமிழரசி, முத்துராஜா, கிருஷ்ணசாமி மற்றும் ஏராளமான திமுகவினர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

Read Entire Article