ஆழியார் அணை நீர்மட்டம் 73 அடியாக உயர்வு பழைய ஆயக்கட்டு பாசன திறப்புக்காக தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது

19 hours ago 3

*அதிகாரிகள் தகவல்

பொள்ளாச்சி : கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த பிஏபி திட்டத்திற்குட்பட்ட ஆழியார் அணையின் மொத்த அடி 120 அடியாகும். இந்த அணையிலிருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கும், குடிநீர் தேவைக்கும்.

வருடத்தில் குறிப்பிட்ட டிஎம்சி தண்ணீர் கேரளாவுக்கு திறக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை என அடுத்தடுத்து பெய்தது.

இதனால், ஆழியார் அணையின் நீர்மட்டம் சில மாதமாக தொடர்ந்து உயர்ந்து இருந்தது. இந்த ஆண்டில் கடந்த ஜனவரி மாதம் வரையிலும் தண்ணீர் இருப்பு ஓரளவு இருந்தது. அதன்பின் சில மாதமாக மழையில்லாததால், தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து ஆழியார் அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல சரிந்து கடந்த ஏப்ரல் மாதம் 65 அடியானது.

இந்நிலையில், கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பிருந்து காடாம்பாறை மற்றும் கண்டூர் கால்வாயிலிருந்து 150 கன அடி முதல், 200 கன அடி வரை தண்ணீர் திறப்பு இருந்தது. இதனால், ஆழியார் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால், தற்போது ஆழியார் அணையின் நீர்மட்டம் 73 அடியாக உயர்ந்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் கோடை மழை குறைவாக இருப்பதால், ஆழியார் அணையில் தண்ணீரை தேக்கி, விரைவில் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இருக்கும்.

அதுபோல் இந்த முறையும் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இருக்கும் என கூறப்படுகிறது. இதனால், குடிநீர் தேவைக்காகவும், பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தேவையான தண்ணீர் திறக்கவும், ஆழியார் அணையில் தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஆழியார் அணை நீர்மட்டம் 73 அடியாக உயர்வு பழைய ஆயக்கட்டு பாசன திறப்புக்காக தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது appeared first on Dinakaran.

Read Entire Article