‘ஆளுநர் அலுவலகம் கூட்டாட்சி முறைக்கு எதிரானது’ - ‘குரூப்-2’ தேர்வில் வினா, விடை சர்ச்சை

5 days ago 7

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று நடந்த குரூப்-2 முதல் நிலைத் தேர்வின் பொது அறிவுப் பகுதியில் ஆளுநர் பதவி குறித்த சர்ச்சைக்குரிய கேள்வி மற்றும் பதிலுக்கான ஆப்ஷன்கள் இடம்பெற்றிருந்தது கவனம் பெற்றுள்ளது.

குருப்-2 பதவிகளில் 507 காலியிடங்கள், குருப்-2ஏ பதவிகளில் 1,820 காலியிடங்கள் என மொத்தம் 2,327 காலியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த முதல்நிலைத் தேர்வு தமிழகம் முழுவதும் 2,763 மையங்களில் சனிக்கிழமை நடந்தது. தேர்வெழுத 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்களில் 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் மட்டுமே தேர்வெழுதினர்.தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணிக்கு முடிவடைந்தது.

Read Entire Article