ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிமுறைகளை ஏன் பின்பற்றவில்லை? - போலீஸாருக்கு ஐகோர்ட் கேள்வி

2 hours ago 2

சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிமுறைகளை ஏன்பின்பற்றவில்லை என போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

விஜயதசமியை முன்னிட்டு அக்.6-ம் தேதி மாநிலம் முழுவதும் 58 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மற்றும்திண்டுக்கல் மாவட்ட போலீஸாரிடம் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி செப்.9 மற்றும் 14-ம் தேதிகளில் அளிக்கப்பட்ட மனுவை பரிசீலிக்கக் கோரி திருப்பூர் ஆர்எஸ்எஸ் செயலாளர் ஜோதி பிரகாஷ், திண்டுக்கல் ஆர்எஸ்எஸ் இணை செயலாளர் சேதுராஜ் ஆகியோர் தனித்தனியாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

Read Entire Article