ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை காலத்தில் ஆவின் பொருட்கள் விற்பனையை 20% அதிகரிக்க திட்டம்

1 week ago 9

சென்னை: நிகழாண்டில் ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை காலத்தில், நெய் மற்றும் இனிப்பு வகைகள் உள்பட ஆவின் பொருட்கள் விற்பனையை 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்க ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனை செய்யும் பணியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஆவின் வாயிலாக, தினசரி சுமார் 34 லட்சம் லிட்டர் மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இப்பாலை பதப்படுத்தி, ஆரஞ்சு, பச்சை, நீல, ஊதா நிறப் பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன.

Read Entire Article