ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 15 பேர் மீது குண்டாஸ்

2 hours ago 3

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 10 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் மேலும் 15 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, ஹரிஹரன், மலர்க்கொடி, சதீஷ்குமார், கோ.ஹரிஹரன், அஞ்சலை, சிவா, பிரதீப், முகிலன், விஜயகுமார், விக்னேஷ், அஸ்வத்தாமன், பொற்கொடி, ராஜேஷ், செந்தில்குமார், கோபி ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Read Entire Article