ஆதித்தமிழர் பேரவை தென்காசியில் ஆர்ப்பாட்டம்

3 hours ago 2

தென்காசி, செப்.20: தென்காசியில் ஒருங்கிணைந்த மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் அருந்ததியர் சமுதாய மக்களுக்கு 3 சதவீத உள் இட ஒதுக்கீடு எதிராகவும், உச்ச நீதிமன்றத்தின் சமூக நீதி தீர்ப்புக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி மறு சீராய்வு மனுவை திரும்பப் பெற வலியுறுத்தியும் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு ஆதி தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தெற்கு மாவட்ட செயலாளர் கலிவருணன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் தென்னரசு, மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் அகிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் வீரபாண்டியன், ஆதித்தமிழர் பேரவையின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் கவுதம், தென்காசி மாவட்ட ஆதி தமிழர் கட்சி செயலாளர் ஆதவன், பூர்வீக தமிழர் விடுதலைக் கட்சி நிறுவனர் இசைவாணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. நகர செயலாளர் அசோக் நன்றி கூறினார்.

The post ஆதித்தமிழர் பேரவை தென்காசியில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article