புதுச்சேரி: கூட்டணி ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என தைரியமாக திருமாவளவன் கூறியது வரவேற்கத்தக்கது. திருமாவளவன் கொள்கையை ஆதரிக்கிறோம். அவர் வெற்றி பெற வாழ்த்துகிறோம். இது நல்ல விஷயம் என பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் கொம்பாக்கம், ரெட்டியார்பாளையம், வில்லியனூர் உட்பட 7 பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்வைத் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: புதுவையில் வாக்குச்சாவடி ஒவ்வொன்றிலும் 200 பேர் வரை புதிய உறுப்பினர் சேர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.