விழுப்புரம்: விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், நேற்று நடைபெற்றது. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு விழுப்புரத்தில் ஜனவரி 3 முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்பது அனைத்து அரசியல் கட்சிகளின் கொள்கை தான். ஆனால் அது உடனே கொண்டு வரமுடியுமா என்பது சிக்கலாக உள்ளது.
இந்தியா முழுவதும் மதுவிலக்கு சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தால் எப்படி பொருத்தமாக இருக்கும் என்பது தெரியவில்லை. மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ள அழைத்திருக்கிறார்கள். நாங்களும் செல்கிறோம். மார்க்சிஸ்ட் உள்பட அனைத்து கட்சிகளின் நோக்கமும் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதுதான். அது நாளைக்கே நடக்குமா என்றால் அது வேறு விஷயம். அதே சமயம் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதில் இருந்து நாங்கள் வேறுபடுகிறோம். விசிக ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்று சொல்வது தொலைநோக்கு பார்வையில் கூறுகிறார்கள். அது 2026 தேர்தலில் இல்லை என அவர்கள் கூறிவிட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
The post ஆட்சி அதிகாரத்தில் பங்கு எங்களுக்கு உடன்பாடில்லை: பாலகிருஷ்ணன் பளீச் appeared first on Dinakaran.