இந்தியா மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்கள், ராஜஸ்தானில் கூட்டு ராணுவப் பயிற்சியை தொடங்கியுள்ளனர். பிகானரில் உள்ள மகாஜன் துப்பாக்கிச்சூடு பயிற்சி மையத்தில், யூத் அபயாஸ் என்ற பெயரில், வரும் 22ஆம் தேதி வரை இரு நாட்டு வீரர்களும் கூட்டு பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இதில், இந்தியாவை சேர்ந்த 600 வீரர்களும், அமெரிக்காவை சேர்ந்த 600 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 2004ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து ஆண்டுதோறும் இந்தியா மற்றும் அமெரிக்க படைகள் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அறிவிக்கப்பட்ட தேதி.. கைகோர்க்கும் இந்தியா - அமெரிக்க ராணுவம்
1 week ago
19
Related
Trending
Popular
© TamilGuru 2024. All rights are reserved