“அரசுத் திட்டங்களில் குறைபாடுகளை ஏற்க முடியாது” - அதிகாரிகளை எச்சரித்த அமைச்சர் உதயநிதி

1 week ago 7

மதுரை: அரசுத் திட்டங்களில் குறைபாடுகள் இருந்தால், அதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் உதயநிதி மதுரையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை எச்சரித்தார்.

மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டங்களில் துறையின் செயலாளர்கள், மாவட்ட அதிகாரிகள் கொடுக்கும் தகவல்களையும், ஆதாரங்களையும் அடிப்படையாக கொண்டு கேள்விகள் கேட்டு விவாதம் நடத்தப்படும். முதல்வரின் ஆய்வுக் கூட்டத்தில் மட்டும், சரியாக செயல்பட அதிகாரிகளை எச்சரிப்பதற்காக சில கேள்விகள் முன்தயாரிப்பு இல்லாமல் கேட்கப்படும். ஆனால், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்ற மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்களின் நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் வழக்கத்திற்கு மாறாக இருந்தது.

Read Entire Article