சென்னை: “அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு 16-ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்குவதாக,” உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
மாநில அளவிலான பாரதி இளம் கவிஞர் கவிதைப் போட்டியில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. மாணவர்கள் பிரிவில் முதலிடம் பெற்ற பழநி பழனியாண்டவர் கலை அறிவியல் பண்பாட்டுக்கல்லூரி மாணவர் முகமது அன்சாரிக்கும் மாணவிகள் பிரிவில் முதலிடத்தை பிடித்த சேலம் புனித சூசையப்பர் கலை அறிவியல் கல்லூரி மாணவி நிவேதாவுக்கும் அமைச்சர் பொன்முடி பரிசுத் தொகையாக தலா ரூ.1 லட்சமும், பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார்.