அரசு பள்ளியில் பீர் அருந்திய மாணவிகள்? - விசாரணைக்கு உத்தரவு

1 week ago 7

பிலாஸ்பூர்,

சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள மஸ்தூரி பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த ஜூலை 29-ந்தேதி வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவரின் பிறந்தநாளை சக மாணவிகள் கொண்டாடியுள்ளனர். அப்போது மாணவிகள் அரசுப் பள்ளிக்குள் பீர் அருந்தியதாக கூறப்படுகிறது.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை மாணவிகள் தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அரசு பள்ளியில் மாணவிகள் பீர் பாட்டில்களை வைத்திருப்பது போன்ற வீடியோவை கண்ட ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. வீடியோ எடுக்கும் போது வேடிக்கைக்காக பீர் பாட்டில்களை அசைத்ததாகவும் ஆனால் அதனை அருந்தவில்லை என்றும் மாணவிகள் விசாரணைக் குழுவிடம் தெரிவித்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சம்பந்தப்பட்ட சிறுமிகளின் பெற்றோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும் மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்தார்.

 

Read Entire Article