அரசு கலைக்கல்லூரி முன்பு நடைமேம்பாலம்

4 days ago 5

தர்மபுரி, செப்.17: நல்லம்பள்ளி தாலுகா, நார்த்தம்பட்டி கிராம மக்கள், நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், கலெக்டர் சாந்தியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் காலையில் கல்லூரி செல்வதற்காக, தர்மபுரி-சேலம் செல்லும் சாலையை கடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, மாணவ, மாணவிகளின் நலன் கருதி, அரசு கலைக்கல்லூரி முன்பு, நடை மேம்பாலம் அமைக்க வேண்டும். இதே போல் நான்குரோடு, அரசு மருத்துவமனை, ஒட்டப்பட்டி பிரிவு சாலை, நல்லம்பள்ளி, லளிகம் பிரிவு சாலை ஆகிய இடங்களில், சிக்னல் அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post அரசு கலைக்கல்லூரி முன்பு நடைமேம்பாலம் appeared first on Dinakaran.

Read Entire Article