‘அமைச்சர் கூறுவது உண்மை அல்ல!’ - ஊதிய பிரச்சினையில் அரசு மருத்துவர்கள் அதிருப்தி

1 week ago 7

சென்னை: அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை இதுவரை நிறைவேற்றாத நிலையில், பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு விட்டதாக தவறான தகவலை அமைச்சர் தெரிவித்துள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு (LCC) அதிருப்தி தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட அறிக்கையில், “தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊதியக் கோரிக்கையை பொறுத்தவரை 293, 354 ஆகிய இரு அரசாணைகள் குறித்து மருத்துவர்களின் சங்கங்களுக்கு இடையே மாறுபட்ட கருத்து இருந்தது. அவர்களுக்குள் ஒருமித்த கருத்தை உருவாக்கி இன்று அந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாக தவறான தகவலை தெரிவித்துள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது.

Read Entire Article