அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்கும் வீடியோ: கோவை திமுக எம்.பி சரமாரி கேள்வி

6 days ago 7

கோவை: “அன்னபூர்ணா விவகாரத்தில் சீனிவாசனுக்கு திமுக துணை நிற்கும். அன்னபூர்ணா சீனிவாசன் மிரட்டப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சீனிவாசன் பேசியதால் ஜிஎஸ்டி பிரச்சினைகள் எளிமையாக மக்களிடம் சென்றடைந்துவிட்டது” என்று கோவை திமுக எம்பி கணபதி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சருடன், கோவையைச் சேர்ந்த தொழில் துறையினர் கலந்துரையாடும் நிகழ்ச்சி கோவையில் நேற்று முன்தினம் (செப்.11) நடந்தது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் கவுரவத் தலைவரும், கோவை ஓட்டல் உரிமையாளருமான சீனிவாசன் ஜிஎஸ்டி வரிவிதிப்பு தொடர்பாக பேசினார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மறுநாள் கோவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவர் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, அவரை வற்புறுத்தி மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டதாக தகவல்கள் பரவின. இது தொடர்பாக பாஜகவுக்கு எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Read Entire Article