சென்னை: “கோவையில் நடந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரை, அத்திக்கடவு-அவிநாசி திட்ட விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியை அதிமுக ஏற்பாடு செய்யவில்லை. முழுக்க முழுக்க விவசாயிகள் கூட்டமைப்பு தான் ஏற்பாடு செய்திருந்தது. விவசாயிகள் கூட்டமைப்பில் சர்வ கட்சியினரும் உள்ளனர், எனவே அந்த நிகழ்ச்சியை அப்படித்தான் பார்க்க வேண்டும்,” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், அத்திக்கடவு-அவிநாசி திட்ட விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்காதது, மற்றும் அவரது விளக்கும் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அத்திக்கடவு-அவிநாசி திட்டம் அதிமுக ஆட்சியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டம். அவரால் அரசிதழில் வெளியிடப்பட்ட திட்டம். அதற்கு செயல்வடிவம் கொடுத்தவர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அந்த திட்டத்தின் 80 சதவீத பணிகள், எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்திலேயே முடிவுற்றது.