அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது சொத்துக்குவிப்பு வழக்கு!!

2 hours ago 3

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவரது மகன் பிரபு மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு தொடரப்பட்டுள்ளது. 2011-2016 வரை அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.32.47 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், அமைச்சர் பதவியை தவறான பயன்படுத்தி வருமானத்தை விட 1057% அதிக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. ரூ.27.9 கோடி லஞ்சம் வாங்கியதாக ஏற்கனவே வழக்கு பதிவுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது சொத்துக்குவிப்பு வழக்கு!! appeared first on Dinakaran.

Read Entire Article