அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்திற்கு இன்று செல்கிறார் பிரதமர் மோடி

21 hours ago 4

குஜராத்: அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்திற்கு பிரதமர் மோடி இன்று செல்கிறார். அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு நேற்று மதியம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், வானில் பறக்க துவங்கிய 30 வினாடிகளில் விழுந்து வெடித்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் விமான பயணிகள் உட்பட 246க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் விமானம் மோதி வெடித்ததில் 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்தனர். 44 பேர் படுகாயமடைந்தனர். விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் விபத்தில் பலியாகி உள்ளார்.

உலகையே உலுக்கி உள்ள இந்த கோர விபத்தில் ஒரே ஒரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார். இந்த கோர விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டியில் பதிவாகி இருக்கும் தகவல்களை ஆராய்ந்து பார்த்தால்தான், கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்பதும், விபத்துக்கான காரணமும் தெரியவரும். எனவே அந்த கருப்பு பெட்டியை கைப்பற்றும் முயற்சியில் மீட்புக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த விமான விபத்து, நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட இன்று குஜராத்தின் அகமதாபாத்திற்கு செல்கிறார். காலை 8 மணிக்கு அவர் அகமதாபாத் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

 

The post அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்திற்கு இன்று செல்கிறார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Read Entire Article