50 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

4 hours ago 4

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையம் வெளியிட்ட அரசாணை: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் சிறப்பு கல்வியினை ஊக்குவித்திட மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகையினை 2023-24ம் ஆண்டு முதல் இருமடங்காக உயர்த்தியும், இத்திட்டத்திற்கு ரூ.14,90,52,000 நிதி ஒப்பளிப்பு செய்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் சிறப்புக் கல்வியினை ஊக்குவிக்கும் பொருட்டு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தினை விரிவுபடுத்தி ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கும் ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வீதம் 50 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படும். ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தினை நீட்டித்து 50 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.1 லட்சம் வீதம் ரூ.50 லட்சம் நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆணையிடுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

The post 50 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Read Entire Article