5 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

2 months ago 10

 

பென்னாகரம், டிச.9: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சி பகுதிகளில், செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில், தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது.  ஆய்வில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஏதும் விற்பனை செய்யப்படவில்லை. பிளாஸ்டிக் பொருட்கள் மட்டும் 5 கிலோ பறிமுதல் செய்து ரூ.2,700 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பது மட்டும் இன்றி, கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. ஆய்வின் போது, இளநிலை உதவியாளர் சின்னசாமி, வேலவன், வெங்கடேசன் துப்புரவு மேற்பார்வையாளர் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

The post 5 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article