கோவை: 2026-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் என, முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக தலைமை நிலைய செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் ஊர்வலமாக சென்று கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்வில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டார்.