166 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

1 week ago 7

 

பாலக்கோடு, செப்.11: மாரண்டஅள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் சுமதி தலைமை வகித்தார். மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பிளஸ்1 மாணவிகள் 166 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணை தலைமை ஆசிரியர் கண்ணன், ஆசிரியர்கள் செந்தில், அருள், சுமதி, காயத்ரி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தங்க சரவணன் மற்றும் நிர்வாகிகள் வீரப்பன், கோவிந்தசாமி, பேரூராட்சி துணை தலைவர் கார்த்திகா பன்னீர்செல்வம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் லட்சுமி, உறுப்பினர் யதிந்தர், கவுன்சிலர்கள் கார்த்திகேயன், விஸ்வநாதன் மற்றும் மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post 166 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் appeared first on Dinakaran.

Read Entire Article