10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை புகாரில் வாக்குமூல ஆடியோ சமூக ஊடகங்களில் பரவுவதாக குற்றச்சாட்டு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

16 hours ago 5

சென்னை: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 10 வயது சிறுமியிடம் போலீஸார் பெற்ற வாக்குமூலம் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதாக பெற்றோர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டதையடுத்து, இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து, அவரது பெற்றோர், பக்கத்து வீட்டில் வசிக்கும்சிறுவன் மீது அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றனர். அப்போது பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை அங்கிருந்த பெண்காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீஸார் தாக்கியதாகக் கூறி பெற்றோர் வீடியோ வெளியிட்டிருந்தனர்.

Read Entire Article